வவுனியா- ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்றிகெய்தகுளம் பிரதேசத்தில் ரயிலுடன்
காரொன்று மோதியதில் காரில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காலை 10.30 மணியளவில் பந்திரின்கேந்திரக்குளம் பிரதேசத்திலுள்ள, பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊடாக பயணித்த காரே ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரில் பயணித்த நான்கு பெண்களுமே சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.
மேலும் இருவர் படுகாயம். கார் சாரதி, பயணித்த சிறுவன் பாதுகாப்பாக தப்பித்தனர். புகையிரதம் வருகிறதென எச்சரித்தும் சாரதி மாமா காரை செலுத்தினார். கதவை திறந்து பாய்ந்து தப்பினேன். தப்பிய சிறுவன் சாட்சியம் அளித்துள்ளான்.
(படங்கள்) ரயிலுடன் காரொன்று மோதியதில் நான்கு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சோகம்.
Reviewed by Madawala News
on
September 16, 2018
Rating: