தன்னுடைய தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிக்காத இலங்கைத் தூதுவரையும் 5 அதிகாரிகளையும் நாட்டுக்கு வரவழைத்த ஜனாதிபதி.
தன்னுடைய தொலைபேசி அழைப்புக்கு பல சந்தர்ப்பங்களில் பதிலளிக்க தவறிய ஒஸ்ட்ரியாவுக்கான
இலங்கைத் தூதுவர் பிரியானி விஜேசேகர உள்ளிட்ட ஐவர் மீண்டும் இலங்கைக்கு அழைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒஸ்ட்ரியாவுக்கான இலங்கைத் தூதுவர் அலுவலகத்திற்கு பல முறை அலைபேசி அழைப்பை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில், அதற்கு எந்தவொரு அதிகாரியும் பதிலளிக்க முன்வரவில்லை.
இதனையடுத்து, குறித்த தூதுவராலயத்தின் தூதுவர் உள்ளிட்ட 5 அதிகாரிகள் மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிக்காத இலங்கைத் தூதுவரையும் 5 அதிகாரிகளையும் நாட்டுக்கு வரவழைத்த ஜனாதிபதி.
Reviewed by Madawala News
on
September 16, 2018
Rating: