ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி ஐக்கிய அரபு
எமிரேட்சில் தொடங்கியது.
இன்று நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன் பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் அடித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சாஹிடி 58 ,ரஷீத் கான் 57 ரன்கள் அடித்தனர். வங்கதேச அணியின் பந்துவீச்சில் சாகிப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .இதன் பின்னர் 256 ரன்களை இலக்காக கொண்டு வங்கதேச அணி களமிறங்கியது.
பங்களாதேஷ் அணி ஆரம்பம் முதல் ஓட்டங்களை எடுக்க தடுமாறியது. சாகிப் அல் ஹசன் மட்டும் அதிகப்படியாக 32 ஓட்டங்களை பெற்றார்.
அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து பங்களாதேஷ் அணி 119 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
தொடரில் இது ஆப்கானிஸ்தான் அணியின் இரண்டாம் வெற்றி ஆகும்.
136 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணியை அதிரடியாக வென்றது ஆப்கானிஸ்தான்... வாழ்த்துக்கள்.
Reviewed by Madawala News
on
September 21, 2018
Rating: