வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோவிட் மீன்பிடி துறைமுகத்துக்கு அண்மையில், கடலலையில்
இழுத்துச்செல்லப்பட்ட பெண்களில் ஒருவரும், அவரை காப்பாற்றுவதற்குச் சென்ற ஆணொருவரும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளனர்.
மரணமடைந்த பெண்ணின் உடல், இராகமை வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. எனினும், அடையாளம் காணப்படவில்லை.
இதேவேளை, மரணமடை நபர் , பண்டாரவளையை வசிப்பிடமாகக் கொண்ட சுஜீவ அனுர சாந்த (வயது 45) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மற்றைய பெண், இராகமை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு பெண்களை காப்பாற்ற கடலில் குதித்தவர் உயிரிழப்பு. பெண்ணும் பலி.
Reviewed by Madawala News
on
August 20, 2018
Rating: