வீடியோ இணைப்பு.. மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை விசேட அதிரடிப்படையினர் பறித்து செல்வதாக ஆர்பாட்டம்.
-ஏ.எல்.றபாய்தீன் பாபு -
புடவைக்கட்டில் மீனவர்கள் வீதி மறியல் போராட்டம்
குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புடவைக்கட்டு முஸ்லிம் கிராமத்தில் 300 மீனவக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் இங்குள்ள மீனவர்களை கடற்பபடையினர் விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் ஆகியோர் மீன்பிடி தொழில் செய்வதற்கு பல்வேறு இடையூறு விளைவிப்பதாக கூறி இன்று காலை புல்மோட்டை திருகோணமலை வீதியை மறித்து இக்கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சட்ட விரோதமாக மீன் பிடியில் ஈடுபடுவதாக அடிக்கடி மீனவர்களை கைது அவர்கள் பிடிக்கும் மீன்களை எடுத்துச் செல்வதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நேற்று இரவு நீன்ட நாட்களின் பின்னர் ஆயிரம் கிலோ சுறா மீன் பிடிபட்டுள்ளது இம்மீமீன்கள் வெடி போட்டு சட்ட விரோதமாக பிடித்துள்ளதாக கூறி விஷேட அதிரடிப்படையினர் இம்மீன்களை எடுத்துச் சென்றுள்ளனர் ,
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் முன்னால் மாகான சபை உறுப்பின் அன்வர் பிரதேச சபை உறுப்பினர் மினவ சங்க அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இதே நேரம் கலகம் அடக்கும் பொலிஸாரும் தயார் நிலையில் உள்ளனர் பதட்டமான சூழ்நிலை தோன்றியது.
வீடியோ இணைப்பு.. மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை விசேட அதிரடிப்படையினர் பறித்து செல்வதாக ஆர்பாட்டம்.
Reviewed by Madawala News
on
August 20, 2018
Rating: