கஞ்சா, போதைப்பொருளை ஒழிக்க அப்துல்கரீம் ஹூஸைன் எடுத்துள்ள முயற்சி.


(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை "ரொட்டவெவ கிராமத்தில் கஞ்சா போதைப்பொருளை ஒழிப்போம்"
எனும் தலைப்பில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

கிராமத்தில் கஞ்சா போதைப்பொருளே எமது உறவினர்களின்  வாழ்க்கையை சீர்குலைக்கின்றது. எமது கிராமத்தையும் இளைஞர்கள் சக நண்பர்களையும் மீட்டெடுப்போம் என்ற நோக்கத்தில்  ரொட்டவெவ கிராமத்தைச்சேர்ந்த அப்துல்கரீம் ஹூஸைன் தனது செலவில் துண்டுப்பிரசுரங்களை அச்சடித்து கடைகளிலும்  வீடு வீடாகவும் வழங்கி வருவதை அவதானிக்க முடிகின்றது.

அவர் விநியோகம் செய்து வரும் துண்டுப்பிரசுரத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது ஏ.கே.ஹூஸைன் ரொட்டவெவ திருகோணமலை எனும் முகவரியில் வசித்து வரும் நான் எனது பிரதான ஜீவனோபாய தொழில் மீன்பிடியாகும்!

இப்போது ரொட்டவெவ கிராமம் உட்பட அதனை சுற்றியுள்ள மஹதிவுல்வெவ, அத்தாபெந்திவெவ,சுகதகம,நொச்சிக்குளம், ஆகிய கிராமங்கள் மொறவெவ பிரதேச செயலகப்பிரிவில் உள்ளது. இப்பகுதியில்  போதைப்பொருள் இளைஞர்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன்  இக்கிராமம் போதைப்பொருள்  கைமாறும் இடமாக மாறி வருகின்றது.

பாடசாலை செல்லும் மாணவர்கள் நாளுக்கு நாள் அடிமையாவதை நாம் எம் கண்களாலேயே  காணக்கூடியதாக உள்ளது.  எமது கிராமம்  மட்டுமல்ல அதனை சுற்றியுள்ள கிராம இளைஞர்களும் போதை பாவனையாளர்களாக மாறி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.இதனால் குடும்ப பிரச்சினைகள் ,கற்பழிப்புக்கள் மற்றும் கைகலப்புக்கள் கூடிக்கொண்டே வருகின்றது.

எனவே இவ்வாறான செயற்பாட்டை தடுப்பதற்கு முதலில் ரொட்டவெவ பகுதியில் கஞ்சா எனும் போதைப்பொருளை ஒழிக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக  அத்துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கஞ்சா, போதைப்பொருளை ஒழிக்க அப்துல்கரீம் ஹூஸைன் எடுத்துள்ள முயற்சி. கஞ்சா,  போதைப்பொருளை ஒழிக்க அப்துல்கரீம் ஹூஸைன் எடுத்துள்ள முயற்சி. Reviewed by Madawala News on August 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.