பாகிஸ்தானின் புதிய பிரதமராக 18ம் திகதி பதவி ஏற்கவுள்ள இம்ரான் கானின் விழாவில் பங்கேற்க
இந்திய மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
1992ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வெற்றி பெற்ற போது தன்னுடன் விளையாடிய சக வீரர்களான ஜாவெட் மியன்டாட், வஸீம் அக்ரம், ரமீஸ் ராஜா, முஸ்டாக் அஹமட், மொயீன் கான் ஆகியோருக்கும் அழைப்பு விடுத்துள்ளதோடு அன்றைய போட்டியின் இந்திய அணியின் தலைவர் கபில் தேவ், சுனில் கவஸ்கார் உற்பட எல்லா பழைய வீரர்களுக்கும் அழைப்பு வடுத்துள்ளார் நேற்று இம்ரான் கானைச் சந்தித்த பாகிஸ்தானுக்கான இந்திய தூதுவர் தற்போதைய இந்திய அணியின் வீரர்கள் கையொப்பமிட்ட ஒரு துடுப்பு மட்டை (Bat) ஒன்றை அன்பளிப்புச் செய்தார்.
தகவல் - எம். றிஸ்வான் காலித் சவுதியில் இருந்து
தனது பதவியேற்பு விழாவுக்கு வருமாறு இந்திய அணி வீரர்களுக்கு அழைப்பு விடுத்த இம்ரான்கான்.
Reviewed by Madawala News
on
August 11, 2018
Rating: