அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்டபட்ட அறபா வட்டார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மத்திய அரசாங்கத்திலிருந்து நிதியினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை ; ஜெமீலா ஹமீட்
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்டபட்ட அறபா வட்டார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மத்திய
அரசாங்கத்திலிருந்து நிதியினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் ஜெமீலா ஹமீட் தெரிவிப்பு
அரசாங்கத்திலிருந்து நிதியினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் ஜெமீலா ஹமீட் தெரிவிப்பு
தேசிய காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அறபா வட்டார மகளிர் அமைப்பினை புனர்த்தானம் செய்யும் கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்படி விடயத்தினை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த வட்டாரத்தில் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக வேட்பாளராக போட்டியிட்டபோது இவ்வட்டார மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்யவில்லை, ஆனால் என்மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெவ்வை ஆகியோர் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் உறுப்பினராக அமரும் சந்தர்ப்பத்தினை வழங்கியிருந்தனர். அதன் மூலம் பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த பல தடவை முயற்சித்தும் பலன் கிட்டவில்லை என்பது வேதனையானதே. அட்டாளைச்சேனை பிரதேச சபையில் அப்விருத்தி நடவடிக்கைகள் மிக மந்தகதியில் இருப்பதுக்கு இன்னுமொரு காரணம் இருப்பதனையும் இவ்விடத்தில் கூறுவதுக்கு விரும்புகின்றேன். சில சந்தரப்பங்களில் தவிசாளர் அபிவிருத்தி நடவடிக்கைக்கு முயற்சிக்கின்ற போதிலும் சில உறுப்பினர்கள் முட்டுக்கட்டையாக இருப்பது ஒரு காரணமாகவுள்ளது.
இருந்த போதிலும், இந்த நடவடிக்கைகளில் சோர்ந்து போகாமல் குறித்த விடயத்தினை தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர், மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், அம்பாரை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுவந்ததன் பலனாக அறபா வட்டார அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு மத்திய அரசாங்கத்திலிருந்து நிதியினை பெற்று நடைமுறைப்படுத்துவதற்குரிய பூர்வாங்க ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளதனை மிக்க சந்தோசத்துடன் தெரிவிக்க விரும்புகின்றேன் என்றார்.
மேலும், இவ்வட்டார பெண்களின் வாழ்வாதார நலன்கள் மற்றும் சமூக நலத்திட்டங்களில் கூடிய கவனம் செலுத்தி அது தொடர்பிலான செயற்றிட்டங்களை வடிவமைத்துள்ளேன், அதனை நடைமுறைப்படுத்த பெண்களாகிய உங்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்றார்.
குறித்த கூட்ட நிகழ்வுக்கு தேசிய காங்கிரஸ் கட்சியி;ன் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எப். யாஸ்மின், உதவித் தவிசாளர் எம்.எஸ்.ஜௌபர் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்டபட்ட அறபா வட்டார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மத்திய அரசாங்கத்திலிருந்து நிதியினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை ; ஜெமீலா ஹமீட்
Reviewed by Madawala News
on
August 18, 2018
Rating: