CCTV இணைப்பு.. ஒருவரை பலிகொண்ட பதுளை கடைத்தொகுதி தீ விபத்தின் காரணம் வெளியானது.


நேற்று முன்தினம் இரவு  பதுளை, கொகோவத்த பகுதியில் உள்ள வாகன உதிரிப்பகங்கள் விற்பனை செய்யும் விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில்  விற்பனை நிலையத்தின் உரிமையாளரான பதுளை பகுதியை சேர்ந்த 46 வயதுடைய சுமீர ஹேமந்த குரே என்பர்  உயிரிழந்தது அறிந்ததே..

தீ விபத்து ஏற்பட காரணம் வெடிப்புச் சம்பவம் ஒன்றே என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த கட்டிடத்தில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்படுவது நிறுவனத்தின் இரு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கெமராக்களில் பதிவாகியுள்ளது.

பதுளை மாவட்ட நீதவானினால் ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கபட்டதுடன் சடலத்தை பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பி பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கையை சமர்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சடலம் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் தொலைக்காட்சி செய்தியில் வெளியான CCTV காட்சிகள்..
CCTV இணைப்பு.. ஒருவரை பலிகொண்ட பதுளை கடைத்தொகுதி தீ விபத்தின் காரணம் வெளியானது. CCTV இணைப்பு.. ஒருவரை பலிகொண்ட பதுளை கடைத்தொகுதி  தீ விபத்தின் காரணம் வெளியானது. Reviewed by Madawala News on August 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.