-ஜே.எம்.ஹபீஸ் -
கண்டி மாநகர சபையின் முன்னாள் அங்கத்தவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்
நிண்டகால செயற்பாட்டு அங்கத்தவருமான அந்தனி சந்தனம் (10.8.2018) காலமானார்.
சிலகாலம் சுகவீனமற்றிருந்த இவர் கண்டி வைத்திய சாலையில் காலமானார் இவர் மரணிக்கும் போது 79 வயதாகும்.
இவர் கண்டி நகரில் பல்வேறு சமூக சேவைப்பணிகளிலும் ஈடுபட்டவர். குறிப்பாக கண்டி இந்து சங்கத்தின் ஸ்தாபகத் தலைவராகும். 45 வருடங்களாக இவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயற்பாட்டு உறுப்பினராக இருந்து கண்டி நகரில் கட்சிக்காகப் பெரிதும் உழைத்தவராகும்.
இவர் தனது அரசியல் சமூக சேவைப் பணிகளுக்கு அப்பால் மேடை நாடகத் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அன்னாரது பூதவுடன் கண்டி பிள்ளையார் கோவில் சுற்று வட்டத்தில் உள்ள அன்னாரது வாசஸ்தலத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை பி.ப.4 மணிக்கு மஹய்யாவ மயாணத்தில் இறுதிக்கிரிகைகள் இடம் பெறும்.
கண்டி மாநகர சபையின் முன்னாள் அங்கத்தவர் காலமானார்.
Reviewed by Madawala News
on
August 10, 2018
Rating: