நீதி மன்றத்திற்கு கல் எறிந்த ரிஷாத் பதியுத்தீன் இன்றும் அமைச்சர் ! இதுவா நீதி ? என மாகல்கந்தே சுதந்த தேரர் குறிப்பிட்டார்.
நேற்று பொதுபல சேனா காரியாளயத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
ஞானசார தேரர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நீதி மன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிடவில்லை , நீதிபதிகளை அவமதிக்கவிக்கவும் இல்லை, ஆனால் நீதி மன்றத்திற்கு கல் எறிந்த ரிஷாத் பதியுத்தீன் இன்றும் அமைச்சர் ! இதுவா நீதி ?.
இந்த நாட்டிற்கான உயிர் தியாகம் செய்த புலனாய்வு அதிகாரிகளை சிறைப்படுத்துவதற்கு எதிராகவே ஞானசார குரல் கொடுத்தார் என அவர் குறிப்பிட்டார்.
நீதி மன்றத்திற்கு கல் எறிந்த ரிஷாத் பதியுத்தீன் இன்றும் அமைச்சர் !! இதுவா நீதி ?
Reviewed by Madawala News
on
August 10, 2018
Rating: