வெலிக்கடை சிறைச்சாலையில், பெண் கைதி ஒருவர், கூரை மீதேறி மீண்டும் போராட்டத்தில்
இன்று (20), ஈடுபட்டிருப்பதாக தெரியவருகிறது.
சிறைக்காவலரை இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக, சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமக்கான அடிப்படை உரிமைகளைக் கோரி, கடந்த 13 ஆம் திகதி, வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள பெண் கைதிகள், இவ்வாறு கூரை மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறைக்காவலரை இடமாற்றம் செய்ததால், பெண் கைதி ஒருவர் கூரை மீதேறி போராட்டம்.
Reviewed by Madawala News
on
August 20, 2018
Rating: