வரக்காப்பொல பிரதேசத்தில் காலவதியான கடவுச்சீட்டுடன் பணி புரிந்த பங்களாதேஷ்
பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நங்கல -துல்கிரிய பிரதேசத்தில் இயங்கி வந்த வாகன பழுதுபார்க்கும் இடத்தில் பணிபுரிந்து வந்த குறித்த பங்களாதேஷ் பிரஜையின் கடவுச்சீட்டு காலாவதியாகிய நிலையில் தொடர்ந்து இவர் நாட்டுக்குள் சட்டவிரோதமாக தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரிய வெளிநாட்டு பிரஜை தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் வேலை செய்து வந்த பங்களாதேஷ் பிரஜை போலீசாரால் கைது.
Reviewed by Madawala News
on
August 18, 2018
Rating: