மஹிந்தவின் குடும்ப ஆட்சியை மீண்டும் மக்கள் உருவாக்க மாட்டார்கள். தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு நூற்றுக்கு 39 வீதவாக்குகளே கிடைத்தன.
உள்ளூராட்சி தேர்தலின் பெறுபேறுகள் மஹிந்தவின் சுயரூபத்தை மீண்டும் வெளிப்படுத்தின. அதாவது
பொதுஜன பெரமுனவுக்கு நூற்றுக்கு 39 வீதவாக்குகள் கிடைத்தன. உள்ளூராட்சி மன்றங்களின் முக்கிய பொறுப்புக்கள் அனைத்திலும் ராஜபக்ஷ குடும்பத்தினரே நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு அடுத்து பதவியில் இருந்த ஏனைய தலைவர்கள் அவர்களுடைய அடிமைகளாகவே காணப்பட்டனர். அதேபோன்று ராஜபக்ஷ குடும்பத்தினர் தங்களுடைய குடும்பத்தினரின் உடலில் மாத்திரமே இரத்தம் ஓடுவதாகவும் ஏனையவர்களின் உடலில் சேறு ஓடுவதாகவும் நினைத்துக் கொண்டிருகின்றனர் என்று பாரிய நகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
கண்டி தலதாமாளிகையி்ல் நேற்று இடம் பெற்ற சமய நிகழ்வுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்
உண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கோ அல்லது அவரது சகோதரர்களான கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பஷில்ராஜபக்ஷவுக்கோ அவர்களது ஆட்சி காலத்தில் நாட்டில் இலாபம் ஈட்டக்கூடிய அரச நிறுவனம் ஒன்றையேனும் உருவாக்கினார்கள் என ஏதாவதொரு நிறுவனத்தை பெயரை குறிப்பிட்டுக் கூற முடியுமா?
அரச பணம் அல்லது வெளிநாட்டு வருமானத்தை எவ்வாறு செலவு செய்வது என்பதை மாத்திரமே அவர்கள் தெரிந்து வைத்திருந்தனரே தவிர இலாமீட்டுவதற்கான எந்த முறையையும் அறிந்து வைத்திருக்கவில்லை.
ராஜபக்ஷவின் முகாமைத்துவ திறனுக்கான சிறந்த உதாரணங்களாக அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் ஆகியவற்றை குறிப்பிடலாம். மத்தள விமான நிலையம் தேசிய சொத்து எனக் அதைப் பற்றி அதிகமாக பேசுகின்றனர். மத்தள விமான நிலையத்தின் மூலமான வருமானத்தை விட செலவு பன்மடங்கு அதிகமாக காணப்படுகின்றது. இது தான் ராஜபக்ஷக்களுடைய பொருளாதார முகாமைத்துவம்.
சிறந்த அரசியல் அறிவுடைய மக்கள் மீண்டும் அவ்வாறானதொரு குடும்ப ஆட்சியை மீண்டும் உருவாக்க மாட்டார்கள். அவர்களுக்கு சார்பாக செயற்படும் சில அடிமைகள் மாத்திரமே அதனை உருவாக்க எண்ணுவார்கள். எமது அரசாங்கத்தில் சிறு சிறு குறைபாடுகள் காணப்படுகின்றன. எவ்வாறிருப்பினும் அவற்றை திருத்தியமைத்து கடன் சுமையிலிருந்து நாட்டை மீட்டெடுத்து முன்னோக்கி கொண்டு செல்வதோடு, அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் பாரிய வெற்றியடைவோம்.
சிங்கப்பூர் உடன்படிக்கை மூலம் நாட்டிற்குள் எந்தவித தேவையற்ற விடயங்களும் வருவதற்கான வாய்ப்புக்களும் இல்லை. எனவே அதனை விமர்சிப்பதற்கான எந்தவொரு தேவையும் மஹிந்த தரப்பினருக்கு இல்லை. அடுத்த தேர்தலில் எமது வெற்றியை உறுதிப்படுத்துவதன் மூலம் இவ்வாறு மேற்கொள்ளப்படும் பொய் விமர்சனங்கள் மற்றும் மக்களை திசை திருப்பும் செயற்பாடுகளை நீக்கிக் கொள்ள முடியும் என்றார்.
மஹிந்தவின் குடும்ப ஆட்சியை மீண்டும் மக்கள் உருவாக்க மாட்டார்கள். தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு நூற்றுக்கு 39 வீதவாக்குகளே கிடைத்தன.
Reviewed by Madawala News
on
August 20, 2018
Rating: