தொட்டலங்க – ஹஜிமா வத்தையில் திருட்டுத்தனமாக மின் இணைப்பை பெற்றிருந்த 110
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபையின் விசேட சுற்றிவளைப்பு பிரிவால் இன்று அதிகாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முகத்துவாரம் காவல்துறையின் உதவியுடன் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் கிராண்பாஸ் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
தொட்டலங்க – ஹஜிமா வத்தையில் திருட்டுத்தனமாக மின் இணைப்பை பெற்ற 110 பேர் போலீராசால் கைது.
Reviewed by Madawala News
on
August 18, 2018
Rating: