சவூதி மன்னரின் விருந்தாளிகளாக 1000 பலஸ்தீனர்களுக்கு ஹஜ் கட்மையை நிறைவேற்ற வாய்ப்பு.


இவ்வருட ஹஜ் பருவகாலத்தில் பலஸ்தீன தியாகிகளின் ஆண், பெண் உறவி னர்கள் ஆயிரம்
பேர் சவூதி அரேபிய மன்னர் சல்மானின் விருந்தாளிகளாக ஹஜ் கட்மையை நிறைவேற்றவுள் ளதாக சவூதி அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த முன்னெடுப்பு இஸ்லாமிய விவகார, அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சின் மேற்பார்வையில் வருடாந்தம் இடம்பெறுகின்ற இரு புனித பள்ளிவா சல்களின் பாதுகாவலரான மன்னரின் விருந்தாளிகள் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.


இவ்வருடம் மன்னரின் விருந்தினர்களாக ஹஜ் கடமையினை நிறைவேற் றுவதற்கு ஆசியா, ஆபி ரிக்கா மற்றும் ஐரோப்பாக் கண்டங்களிலிருந்து மக்கள் வருகை தரவுள்ளனர் என அறிக்கையொன்றில் தெரிவித்துள்ள இஸ்லாமிய விவகார, அழைப்பு மற்றும் வழி காட்டல் அமைச்சர் செய்க் கலாநிதி அப்துல் லத்தீப் பின் அப்துல் அஸீஸ் அல் அல்செய்க் 22 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்த இத் திட்டத்தின் மூலம் 43,547 ஆண் பெண் யாத்திரிகர்கள் நன்மையடைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

சவூதி மன்னரின் விருந்தாளிகளாக 1000 பலஸ்தீனர்களுக்கு ஹஜ் கட்மையை நிறைவேற்ற வாய்ப்பு. சவூதி மன்னரின் விருந்தாளிகளாக 1000 பலஸ்தீனர்களுக்கு ஹஜ் கட்மையை நிறைவேற்ற வாய்ப்பு. Reviewed by Madawala News on August 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.