சென்றமாதம் இடம்பெற்ற விபத்தில் படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்த ஏ.எம்.ரிபாஸ் உயிரிழப்பு.


திருகோணமலை - கந்தளாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த
நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் 17ஆம் திகதி விபத்தில் படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்த ஏ.எம்.ரிபாஸ் எனும் வயது 28 இளைஞரே இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

திருகோணமலையிலிருந்து கந்தளாய் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பாலமொன்றில் மோதியதால் நேர்ந்த விபத்தில் ஒருவர் கோமா நிலைக்கு சென்றிருந்தார்.



இன்னுமொரு நபர் கை, கால்களிலுள்ள எலும்புகள் முறிந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கை, கால் எலும்புகள் முறிந்து தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தவரே இன்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்றமாதம் இடம்பெற்ற விபத்தில் படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்த ஏ.எம்.ரிபாஸ் உயிரிழப்பு. சென்றமாதம் இடம்பெற்ற விபத்தில்  படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்த ஏ.எம்.ரிபாஸ் உயிரிழப்பு. Reviewed by Madawala News on July 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.