பேலியகொடை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏழு வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.
பேலியகொடை நுகே வீதியில் அமைந்துள்ள வீடுகளே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளன.
மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்தினால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தீப்பரவல்.... ஏழு வீடுகள் தீக்கிரையாகின.
Reviewed by Madawala News
on
July 16, 2018
Rating: