"தமிழ்த்தலைவி" விஜயகலா... யாழ். நகரில் சுவரொட்டிகள் .


முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை "தமிழ்த்தலைவி"என குறிப்பிட்டு
யாழ். நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

என்றும் நாம் உங்களுடன், தமிழ் பேசும் மக்கள் என பெயரிடப்பட்டு குறித்த சுவரொட்டிகள் காணப்படுகின்றன.



யாழ்ப்பாண பஸ் நிலையம், மற்றும் யாழ்ப்பாணத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

"சுயலாபமற்ற அரசியலில் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காய் அன்று உயிர் துறந்தார் மகேஸ்வரன் இன்று பதவி துறந்தார் தமிழ்த்தலைவி விஜயகலா மகேஸ்வரன்" என குறிப்பிடப்பட்டுள்ளன.
"தமிழ்த்தலைவி" விஜயகலா... யாழ். நகரில் சுவரொட்டிகள் . "தமிழ்த்தலைவி" விஜயகலா... யாழ். நகரில் சுவரொட்டிகள் . Reviewed by Madawala News on July 06, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.