இன்று அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட இரு கிரிமினல்ஸ்..


மாத்தறை நகரில் தங்காபரண விற்பனை நிலையமொன்றை கொள்ளையிட வந்த நிலையில் பொலிஸாருடன்
இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்ட, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கொஸ்கொட தாரக உள்ளிட்ட சந்தேகநபர்கள் இருவர் இன்று அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.



இருந்தும் சாட்சி கூற இருந்த நபர்கள் அடையாள அணிவகுப்பிற்கு வர முடியாமல் போனதால் அதனை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு மாற்றுமாறு நீதிமன்று உத்தரவிட்டது.

மாத்தறை நகர பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது.

இதன்போது கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தமை நினைவு கூறத்தக்கது.
இன்று அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட இரு கிரிமினல்ஸ்.. இன்று அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட இரு கிரிமினல்ஸ்.. Reviewed by Madawala News on July 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.