விருப்புவாக்கு முறையை மாற்றப்போகின்றோம் என்றுகூறி புதிய தேர்தல் முறைக்கு ஆதரவளித்த
அரசியல்கட்சிகள் இன்று பழய தேர்தல் முறைதான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். பழய தேர்தல் முறையிலுள்ள விருப்புவாக்குமுறையை நேரடியாக கேட்பதற்கு பதிலாக வேறு காரணங்களைக்கூறி பழய முறையில் தேர்தலை நடத்துங்கள் என்று கூறுகின்றார்கள்.
அரசியல்கட்சிகள் இன்று பழய தேர்தல் முறைதான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். பழய தேர்தல் முறையிலுள்ள விருப்புவாக்குமுறையை நேரடியாக கேட்பதற்கு பதிலாக வேறு காரணங்களைக்கூறி பழய முறையில் தேர்தலை நடத்துங்கள் என்று கூறுகின்றார்கள்.
அண்மையில் நடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் விகிதாசார முறைமூலம் கிடைத்த உறுப்பினர்களுள் வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களைத் தவிர மீதியாக உள்ள உறுப்பினர்களை நியமிக்கும் போது அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அந்தந்தக்கட்சிக்குள் இன்றும் அதன் தாக்கங்கள் புகைந்து கொண்டும்தான் இருக்கிறது.
உள்ளூராட்சிமன்ற உறுப்பினர் பதவிகளுக்கே இவ்வளவு போட்டியென்றால் வருமானங்களை அள்ளிக்கொட்டும் மாகாணசபை உறுப்பினர்களைப் பெறுவதற்கு எவ்வளவு யுத்தம் செய்வார்கள் என்பது கட்சித்தலைவர்களுக்கு தெரியாத ஒன்றல்ல. இதன் காரணமாகவே பழய தேர்தல் முறையையில் தேர்தல் நடத்துங்கள் என்று கூறுகின்றார்கள்.
பழய தேர்தல் முறையில் விருப்புவாக்கு முறையில் உறுப்பினர்களுக்கு மத்தியில் பிரச்சினைகள் நடந்தாலும் தேர்தல் நடந்து முடிந்ததன் பின் அதன் தாக்கங்கள் நின்றுவிடும். தேர்தலின் பின் எங்களுக்கும் உறுப்பினர்கள் தாருங்கள் என்று கட்சித்தலைவர்களை யாரும் நாடுவது கிடையாது, அதற்கு காரணம் ஏற்கனவே விருப்பு வாக்குகளின் மூலம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதேயாகும். அதன் காரணமாக கட்சித் தலைவர்களின் தலை தப்பி வந்தது.
புதியதேர்தல் முறைமூலம் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் தொகுதியில் தெரிவு செய்யப்படுபவர்களைத்தவிர மற்ற உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் செயலாளர்களுக்கே இருக்கின்ற காரணத்தால், தேர்தல் முடிந்த கையோடு அந்தக்கட்சியிலே தேர்தல்கேட்ட சகல உறுப்பினர்களும் கட்சித்தலைவர்களின் வாசல்படியிலேயே தவம் கிடப்பார்கள். இதன் மூலம் கட்சியின் தலைமைகளுக்கு பல பிரச்சினைகள் தோன்றுவதற்கு அதுவொரு காரணமாக அமைந்துவிடும்.
தேர்தலிலே போட்டியிட்ட உள்ளூராட்சிசபை உறுப்பினர்களைக்கூட சமாளித்துவிடலாம், ஆனால் மாகாணசபை உறுப்பினர்களை சமாளிப்பது என்பது மிகவும் கஷ்டமான காரியம் என்பது அதன் பெறுமதி தெரிந்தவர்களுக்கு தெரியாத ஒன்றல்ல.
கடந்த காலங்களில் தேசியப்பட்டியல் எம்பிக்களை வைத்துக்கொண்டு கட்சித்தலைவர்கள் பட்ட கஷ்டங்களை நாம் அறிவோம்.
ஆகவே இந்தப்பிரச்சினையிலிருந்து தப்புவதாக இருந்தால் பழய தேர்தல் முறையிலுள்ள விருப்புவாக்கு முறையே சிறந்தது என்ற என்னத்தின் காரணமாக இவர்கள் அந்த முறையை மீண்டும் கொண்டுவருவதற்காகத்தான் வேறுகதைகளை பேசிக்கொண்டு வருகின்றார்கள் என்பதே உண்மையாகும்.
எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை..
பிச்சைவேண்டாம் நாயைபிடி என்ற நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் நிலை..!
Reviewed by Madawala News
on
July 17, 2018
Rating: