உலகின் பலம் வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கை பின்னடைவு .





உலகின் பலமான கடவுச்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலை சர்வதேச குடியுரிமை
தொடர்பில் செயற்படுகின்ற ‘ Henley & Partners” நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஒரு நாட்டின் கடவுச்சீட்டினை பயன்படுத்தி எத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும் என்ற எண்ணிக்கையினை வைத்து இந்த தரவரிசை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் 183 நாடுகளுக்கு ஜப்பான் சிங்கப்பூர் ஆகிய நாட்டு கடவுச்சீட்டுகள் மூலம் பயணிக்க முடியம் என்பதை கருத்தில் கொண்டு ஜப்பான் மற்றும் சிங்கப்பூர்  முதலாம் இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளன. குறித்த பட்டியலில் ஜேர்மனி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ள அதேவேளை தென் கொரியா ஸ்பெய்ன் பின்லாந்து பிரான்ஸ் இத்தாலி மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் பலமிக்க கடவுசீட்டுகளை கொண்ட நாடுகள் பட்டியலில் 3 இடத்தை பிடித்துள்ளன.

105 நாடுகளை உள்ளடக்கியுள்ள இந்த பட்டியலில் இலங்கைக்கு 94 வது இடம் கிடைத்துள்ளது. அதற்கமைய இலங்கையின் கடவுச்சீட்டினை பயன்படுத்தி 42 நாடுகளுக்கு வீசா இன்றி பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் 89 வது இடத்தில் இருந்த இலங்கை பின்னோக்கி சென்றுள்ளது.

இந்த பட்டியலில் இலங்கை மற்றும் மியன்மார் நாடுகள் 94வது இடத்தினை பகிர்ந்து கொண்டுள்ளன.

சோமாலியா, பாகிஸ்தான், சிரியா, ஈரான், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த தரவரிசையில் பலமற்ற கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளாக பதிவாகியுள்ளது.

இலங்கை பல்வேறு விடயங்களில் முன்னேற்றம் கண்டுள்ள போதிலும் 62 ம் இடத்தில் உள்ள  ஸிம்பாப்வே நாட்டை விட பந்தங்கியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகின் பலம் வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கை பின்னடைவு . உலகின் பலம் வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கை பின்னடைவு . Reviewed by Madawala News on July 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.