பதுளை - ஹல்தும்முல்லை - வங்கெடிகல மலையை பார்வையிட சென்ற 10 பேர் குறித்த பகுதியில்
திடீரென ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக அங்கு சிக்குண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தீ பரவி வருவதனால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியிலும், தீயில் சிக்கித் தவிப்போரை காப்பாற்றும் முயற்சியிலும், தியத்தலாவ இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினர் குறித்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
பதுளை பிரதேச காட்டுத்தீயில் 10 பேர் சிக்கினர். காப்பாற்றும் முயற்சி ஆரம்பம்.
Reviewed by Madawala News
on
July 13, 2018
Rating: