பிறை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஹலீம் அதிரடி... இனிமேல் முஸ்லிம் சமய விவகார அமைச்சே பிறையை தீர்மானித்து அறிவிக்கும்.
ஷவ்வால் மாத தலைப்பிறை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் சமூகத்தில் பல எதிர்வலைகளை
ஏற்படுத்தியுள்ளன.
இவற்றுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம் சமய விவகார அமைச்சையே சார்ந்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் பிறை சம்பந்தமான தீர்மானங்களை அமைச்சே மேற்கொள்ளும் என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.
ஏற்படுத்தியுள்ளன.
இவற்றுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம் சமய விவகார அமைச்சையே சார்ந்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் பிறை சம்பந்தமான தீர்மானங்களை அமைச்சே மேற்கொள்ளும் என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.
ஷவ்வால் மாத தலைப்பிறை தொடர்பாக சமூகத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகள் தொடர்பில் வினவியபோதே அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில்;
“கடந்த காலங்களில் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கென தனியான ஒரு அமைச்சு இல்லாதிருந்த காலப்பகுதியில் பெரிய பள்ளிவாசல் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்பன இணைந்து பிறை தொடர்பான தீர்மானங்களை மக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தன. ஆனால் தற்போது முஸ்லிம் சமய விவகாரங்களுக்கென தனியான ஒரு அமைச்சு உள்ளது. எனவே இந்த அமைச்சே பிறை காணும் விவகாரத்தை கையேற்கும்.
அமைச்சின் கீழ் இயங்கும் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் தீர்மானங்களை வெளியிடும் அதிகாரியாக செயற்படுவார்.
கொழும்பு பெரிய பள்ளிவாசலும் தலைப்பிறை பார்க்கலாம். ஆனால் தீர்மானங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளரே வெளியிடுவார். பிறை பார்க்கும் குழுவில் பெரிய பள்ளிவாசல் பிரதிநிதி, சூரா சபை பிரதிநிதி, உலமா சபை பிரதிநிதிதி, வானசாஸ்திர விஞ்ஞானிகள் அடங்கியிருக்கலம். ஆனால், முஸ்லிம் சமய விவகார அமைச்சே சகல பொறுப்புகளையும் கையாளும்.
இம்முறை ஷவ்வால் மாத பிறை தீர்மானிக்கும் விடயத்தில் நடந்தது என்ன? ஏன் குளறுபடிகள் ஏற்பட்டன என்பது தொடர்பில் விசாரணையொன்றினை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணையின் பின்பு எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாதிருப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.
முஸ்லிம் சமய விவாகரங்களுக்கென தனியான ஒரு அமைச்சு இல்லாதிருந்த காலத்தில் பெரிய பள்ளிவாசல் பொறுப்பாக இருந்து இந்தப் பணியை முன்னெடுத்திருக்கலாம். ஆனால், தற்போது முஸ்லிம் சமய விவகாரத்துக்கு தனியான அமைச்சொன்று இருக்கிறது. எனவே இந்த விவகாரத்தை எதிர்வரும் காலங்களில் முஸ்லிம் விவகார அமைசசே கையாளும்.
சமூகத்தில் பிளவுகளை உருவாக்க ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. இவ்விவகாரத்தில் எமக்குள் நாம் ாம் பிரச்சினைப்பட்டுக் கொள்வது ஒருபோதும் அனுமதிக்கப்படாது.
பல்வேறு சமூக நல அமைப்புகளும் புத்திஜீவிகளும் பிறைப் பார்த்தல் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை முன் வைத்துள்ளார்கள். இந்த ஆலோசனைகளும் கவனத்திற் கொள்ளப்படவுள்ளன என்றார்.
மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.
ஷவ்வால் மாத தலைப்பிறை தொடர்பாக சமூகத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகள் தொடர்பில் வினவியபோதே அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் ‘விடிவெள்ளி’க்கு இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில்;
“கடந்த காலங்களில் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கென தனியான ஒரு அமைச்சு இல்லாதிருந்த காலப்பகுதியில் பெரிய பள்ளிவாசல் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்பன இணைந்து பிறை தொடர்பான தீர்மானங்களை மக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தன. ஆனால் தற்போது முஸ்லிம் சமய விவகாரங்களுக்கென தனியான ஒரு அமைச்சு உள்ளது. எனவே இந்த அமைச்சே பிறை காணும் விவகாரத்தை கையேற்கும்.
அமைச்சின் கீழ் இயங்கும் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் தீர்மானங்களை வெளியிடும் அதிகாரியாக செயற்படுவார்.
கொழும்பு பெரிய பள்ளிவாசலும் தலைப்பிறை பார்க்கலாம். ஆனால் தீர்மானங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளரே வெளியிடுவார். பிறை பார்க்கும் குழுவில் பெரிய பள்ளிவாசல் பிரதிநிதி, சூரா சபை பிரதிநிதி, உலமா சபை பிரதிநிதிதி, வானசாஸ்திர விஞ்ஞானிகள் அடங்கியிருக்கலம். ஆனால், முஸ்லிம் சமய விவகார அமைச்சே சகல பொறுப்புகளையும் கையாளும்.
இம்முறை ஷவ்வால் மாத பிறை தீர்மானிக்கும் விடயத்தில் நடந்தது என்ன? ஏன் குளறுபடிகள் ஏற்பட்டன என்பது தொடர்பில் விசாரணையொன்றினை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணையின் பின்பு எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாதிருப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.
முஸ்லிம் சமய விவாகரங்களுக்கென தனியான ஒரு அமைச்சு இல்லாதிருந்த காலத்தில் பெரிய பள்ளிவாசல் பொறுப்பாக இருந்து இந்தப் பணியை முன்னெடுத்திருக்கலாம். ஆனால், தற்போது முஸ்லிம் சமய விவகாரத்துக்கு தனியான அமைச்சொன்று இருக்கிறது. எனவே இந்த விவகாரத்தை எதிர்வரும் காலங்களில் முஸ்லிம் விவகார அமைசசே கையாளும்.
சமூகத்தில் பிளவுகளை உருவாக்க ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. இவ்விவகாரத்தில் எமக்குள் நாம் ாம் பிரச்சினைப்பட்டுக் கொள்வது ஒருபோதும் அனுமதிக்கப்படாது.
பல்வேறு சமூக நல அமைப்புகளும் புத்திஜீவிகளும் பிறைப் பார்த்தல் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை முன் வைத்துள்ளார்கள். இந்த ஆலோசனைகளும் கவனத்திற் கொள்ளப்படவுள்ளன என்றார்.
விடிவெள்ளி-
பிறை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஹலீம் அதிரடி... இனிமேல் முஸ்லிம் சமய விவகார அமைச்சே பிறையை தீர்மானித்து அறிவிக்கும்.
Reviewed by nafees
on
June 18, 2018
Rating: