நகைக்கடை கொள்ளையில் பரபரப்பு... போலீசாருக்கும் - கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூட்டில் 3 பொலிஸார் உட்பட நால்வர் காயம்.


மாத்தறை நகர பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் இன்று காலை
கொள்ளச் சம்பவம் ஒன்று இடம்பெற்று துப்பாக்கி சூட்டில் முடிந்துள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மாத்தறை நகரத்தில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 03 பொலிஸார் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

அத்துடன் பொலிஸார் தவிர மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதுடன் அதில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 கொள்ளை  தொடர்பில் அங்கிருந்த ஒருவரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு வந்த பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், பொலிஸார் மூவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பொதுமகன் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
நகைக்கடை கொள்ளையில் பரபரப்பு... போலீசாருக்கும் - கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூட்டில் 3 பொலிஸார் உட்பட நால்வர் காயம். நகைக்கடை கொள்ளையில் பரபரப்பு... போலீசாருக்கும் - கொள்ளையர்களுக்கும் இடையில்  துப்பாக்கிச் சூட்டில் 3 பொலிஸார் உட்பட நால்வர் காயம். Reviewed by Madawala News on June 22, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.