(படங்கள்) அப்டேட்... மாத்தறை நகைக்கடை கொள்ளை துப்பாக்கி சூட்டில் காயமடைந்த போலிஸ்காரர் உயிரிழப்பு.


மாத்தறை நகரத்தில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில்
03 பொலிஸார் உற்பட  5 பேர்  காயமடைந்த நிலையில் ஒரு போலீஸ் உத்தியோகத்தர் பலியாகி உள்ளார்.

மாத்தறை நகர பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் இன்று காலை கொள்ளச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


இதனையடுத்து சம்பவம் தொடர்பில் அங்கிருந்த ஒருவரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு வந்த பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

06 பேர் அடங்கிய கொள்ளைக் கும்பல் ஒன்றே கொள்ளையிட வந்துள்ளதாகவும், கொள்ளையிட வந்த சிலர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.


காயமடைந்தவர்களில் பொதுமகன் இருவர்  உள்ளடங்குவதாக தெரிவித்துள்ள பொலிஸார், கொள்ளையிட வந்த ஏனையவர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


(படங்கள்) அப்டேட்... மாத்தறை நகைக்கடை கொள்ளை துப்பாக்கி சூட்டில் காயமடைந்த போலிஸ்காரர் உயிரிழப்பு. (படங்கள்) அப்டேட்... மாத்தறை நகைக்கடை கொள்ளை துப்பாக்கி சூட்டில் காயமடைந்த போலிஸ்காரர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on June 22, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.