- ஆஷிக்-
பேராதனை கன்னோருவ வீதியில் மஹாவலி கங்கையில் நேற்று 20 ம் திகதி மாலை இடம் பெற்ற படகு
விபத்து ஒன்றில் சவுதி அரேபியா நாட்டைசேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவர் கானாமற் போய் இருந்ததாக பொலீஸார் தெரிவித்தது அறிந்ததே. இந்நிலையில் நேற்று அவர் மீட்கப்பட்டார்.
நேற்று மாலை சவுதி அரேபியா வைசேர்ந்த எட்டு சுற்றுலா பயனிகளுடன் மஹாவலி கங்கையில் பயனித்த படகு கன்னோருவ பிரதேசத்தில் விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
இப் படகு விபத்துக்கு உள்ளாகும் போது அதில் ஐந்து ஆண்களும் மூன்று பெண்களும் இருந்துள்ளதுடன் படகோட்டியுடன் ஒன்பது பேர் இருந்துள்ளனர்.
படகு விபத்து இடம் பெற்றதுடன் பிரதேச வாசிகள் பொலீஸாரினதும் கடற் படையினரினதும் உதவியுடன் ஏழு பேரை காப்பாற்றியுள்ளதுடன் மேலும் 24 வயதுடைய ஒருபெண் கானாமற் போயுள்ளார்.
கானாமற் போன அப்பெண்ணை தேடும் நடவடிக்கையில் பொலீஸார் மற்றும் கடற் படையினர் இரவு வேலையிலும் ஈடுபட்டு அவரை மீட்டதாக தகவல்கள் தெரிவிகின்றன.
(படங்கள்) சவுதி நாட்டவர்கள் மகவெலி ஆற்றில் கவிழ்ந்த சம்பவா அப்டேட்..
Reviewed by Madawala News
on
June 21, 2018
Rating: