மத்திய மாகாண தவ்ஹீத் ஜமாத் ஏற்பாட்டில் மெனிக்கின்னை, கும்புக்கந்துரை, அக்குறனை உற்பட பல பிரதேசங்களில் இன்று 15/06/2018 நோன்பு பெருநாள் திடல் தொழுகை இடம்பெற்றது..



மத்திய மாகாண தவ்ஹீத் ஜமாத் ஏற்பாட்டில்   மெனிக்கின்னை, கும்புக்கந்துரை, அக்குறனை உற்பட
பல பிரதேசங்களில் இன்று 15/06/2018 நோன்பு பெருநாள் திடல் தொழுகை இடம்பெற்றது.

பல இடங்களிலும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.

மெனிக்கின்ன திடல் தொழுகையின் பின்னர் கருத்து வெளியிட்ட மத்திய மாகாண தவ்ஹீத் ஜமாத் தலைவர் அஷ்ஷேய்க் இம்ரான் நேற்று நாட்டின் பல பகுதிகளில் மஹ்ரிபுக்கு பின்னர் பிறை தென்பட்டதாககவும், கிடைத்த தகவல்களை  உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

எனினும் சமூகத்தின் ஓர்மைப்பாடு மற்றும் ஒற்றுமை கருதி, குறித்த தகவலை அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா அறிவிக்கும்வரை ஆவலுடன் நள்ளிரவுவரை காத்திருந்ததாகவும், பிறைக் கண்ட செய்திகளை தம்மால் இயன்றளவு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சார்ந்த உலமாக்கள் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும் குறிப்பிட்டார்.

ஒற்றுமையாக அனைத்து மக்களும் இன்றைய பெருநாள் தினத்தை கொண்டாட வேண்டும் என்ற ஆசையிலேயே நள்ளிரவுவரை மத்திய மாகாண தவ்ஹீத் ஜமாத் உற்பட, ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் அன்ஸாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யா  உற்பட தேசிய அளவில் உள்ள அனைத்து தவ்ஹீத் அமைப்புக்களும் தனிப்பட்ட அறிவித்தல்களை மேற்கொள்ளாது தாமதித்தனர் என்றும் குறிப்பிட்ட அவர், கண்ட பிறை மறுக்கப் பட்டதன் விளைவாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மீது வைத்த நம்பிக்கையை இழந்து பெருநாளை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறினார்.

மேலும் இம்முடிவானது பிரிந்து பெருநாள் கொண்டாட வேண்டும் என்பதற்காகவோ, உலமா சபைக்கு கட்டுப் படாதிருப்பதற்காகவோ எடுக்கப் பட்ட முடிவல்ல என்றும், அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப் பட்ட எடுத்த முடிவு என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தமது நிலைபாடுகளை மீழ் பரிசீலனை செய்வது சமூகத்துக்கு மட்டுமல்லாது ஜம்இய்யாவிற்கும் நன்மையானதாக அமையலாம் என நாம் ஜம்இய்யாவுக்கு நஸீஹத் செய்வதாகக் கூறினார்.
மத்திய மாகாண தவ்ஹீத் ஜமாத் ஏற்பாட்டில் மெனிக்கின்னை, கும்புக்கந்துரை, அக்குறனை உற்பட பல பிரதேசங்களில் இன்று 15/06/2018 நோன்பு பெருநாள் திடல் தொழுகை இடம்பெற்றது.. மத்திய மாகாண தவ்ஹீத் ஜமாத் ஏற்பாட்டில்   மெனிக்கின்னை, கும்புக்கந்துரை, அக்குறனை உற்பட பல பிரதேசங்களில் இன்று 15/06/2018 நோன்பு பெருநாள் திடல் தொழுகை இடம்பெற்றது.. Reviewed by Madawala News on June 15, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.