முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் தொட்டியடிப்பகுதியில் வசித்துவரும் 16 வயது சிறுமியான
கேதீஸ்வரன் மதுசுதா என்ற சிறுமி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலை சிறுமி அவரது வீட்டின் பின்புறம் உள்ள கூழா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார் சம்பவம் குறித்து அயலில் உள்ளவர்கள் ஒட்டுசுட்டான் பொலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலீஸார் தற்கொலை குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்
தூக்கில் தொங்கிய சிறுமியின் சடலம் ஒட்டுசுட்டான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மரண விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலீஸார் மேற்கொண்டுள்ளார்கள்.
சிறுமி ஒருவர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு.
Reviewed by Madawala News
on
June 25, 2018
Rating: