பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரது, விளக்கமறியலில்
விவகாரம் தொடர்பாக, பௌத்த சமய விவகார அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக பௌத்த பிக்குகள்,அமைப்புகள் கண்டனங்களைத் தெரிவித்து வருவது நாம் அறிந்ததே.
இந்த நிலையில் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோருடன் இது குறித்து நேற்று கலந்துரையாடப்பட்டு இருந்த நிலையில், இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஞானசார தேரர் விவகாரம் ! ஜனாதிபதி மற்றும் புத்தசாசன அமைச்சருக்கும் இடையே விஷேட கலந்துரையாடல்
Reviewed by Madawala News
on
June 20, 2018
Rating: