எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (நாளை) விசேட செய்தியொன்றினை வெளியிடவுள்ளதாக பிணையில்
விடுதலை செய்யப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசாரதேரர் தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் வைத்து ஞானசார தேரர் அச்சுறுத்தியதாக தொடரப்பட்டிருந்த வழக்கில் ஞானசாரதேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
இத்தண்டனைக்கு எதிராக ஞானசாரதேரர் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டது. மேன்முறையீட்டு மனுவை விசாரித்த ஹோமாகம நீதிமன்ற நீதிவான் ஞானசார தேரரை தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த இரு சரீர பிணையில் விடுதலை செய்தார். நீதிமன்றின் அனுமதியின்றி வெளிநாட்டு விஜயத்தினை மேற்கொள்ள முடியாது என்ற நிபந்தனையுடனான பிணை வழங்கினார்.பிணைப்பத்திரத்தில் கைச்சாத்திட்ட ஞானசாரதேரர் ஹோமாகம நீதிவான் நீதிமன்ற வளாகத்தைவிட்டு வெளியேறியபோது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (நாளை) விசேட செய்தியொன்றினையும் வெளிப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சிறைச்சாலைக்குள் சங்க சட்டத்தையும் நீதிமன்ற சட்டத்தையும் காப்பாற்றிக் கொண்டு தண்டனை அனுபவித்ததாகவும் அவர் கூறினார்.
-Vidivelli
-Vidivelli
ஞானசார தேரரின் விஷேட அறிவிப்பு நாளை ..
Reviewed by Madawala News
on
June 25, 2018
Rating: