ரோஷம் இல்லாவிட்டால் பரவாயில்லை உடலில் கொஞ்சம் கூச்சமாவது நம் உறுப்பினர்களுக்கு இருக்கவேண்டும்.



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்கே படிக்கும் மாணவிகள் தேர்வில் சித்தியடைவதாக
இருந்தால் பாலியல் லஞ்சம் கொடுத்துத்தான் சித்தியடைய முடியும் என்று விஜயதாச ராஜபக்ச அவர்கள் பாராளுமன்றத்தில் பகிரங்கமாகவே கூறியிருந்தார்.இந்த  விடயத்திற்கு யாரெல்லாம்  பின்னாலிருந்து செயல்பட்டார்கள் என்பதை இறைவேனே  அறிவான். 

ஆனால் குறித்த செய்தி பல்கலைக்கழக மாணவிகளை மட்டுமல்ல,அவர்களுடைய குடும்பத்தாரையும் பாதித்திருந்தது.இந்த விடயத்தின் பாரதூரத்தை அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த எந்த பாராளுமன்ற உறுப்பினரும் உணர்ந்திருகவுமில்லை அதே நேரம் அதற்கு பதில் கொடுக்கவுமில்லை.அதனால் விஜயதாச ராஜபக்ச அவர்கள் கூறியது உண்மை என்ற நிலைக்கு சென்றுவிட்டது. 

இதன் தாக்கத்தை எவரும் கண்டுகொள்ளாத நிலையில் பிரதியமைச்சர்  ஹரீஸ் அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் எதிர்ப்பு குரல் கொடுத்ததன் காரணமாக அந்தக் கலங்கம் நீக்கப்பட்டுள்ளது. 

அவருடைய எதிர்ப்பின் காரணமாக விஜயதாச ராஜபக்ச அவர்களே நான் அப்படிக்கூறவில்லை என்று மறுத்தது மட்டுமல்ல,பாராளுமன்ற அமர்வின் பிற்பாடு பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து அந்தத் தவறை ஒத்துக்கொண்டு,இனிமேல் நான் கவனமாக நடந்து கொள்கின்றேன் என்று கூறுமளவுக்கு நிலைமை சென்றுள்ளது.

இந்த விடயத்தை நாங்கள்  பாராட்டாமல் இருக்கமுடியாது.முஸ்லிம்களின் தலைவன் என்று பேரெடுத்தவர்களும், அம்பாரை மாவட்டத்தில் நாங்களும் எம்பிகள்தான் என்று கோமாளி வேசம் போடுபவர்களின் மத்தியில் இவர் நடந்து கொண்ட விடயம் பாராட்டப்படவேண்டிய  ஒன்றாகும்.இவரும் மற்றவர்களைப்போல் பயந்துகொண்டு பேசாமல் விட்டிருந்தால், விஜயதாச ராஜபக்ச அவர்கள் கூறிய குற்றச்சாட்டு உண்மையென்றே ஆகியிருக்கும். 

பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் பாராளுமன்றத்தில் கண்டன குரல் எழுப்பியதன் பிற்பாடே அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்களுக்கும் உண்மை நிலை தெரியவந்துள்ளது.அவரும் சிலரின் கதையை நம்பியே இப்படி நடந்துள்ளார் என்ற உண்மையும் வெளியாகிவிட்டது.

ரோஷம் இல்லாவிட்டால்  பரவாயில்லை  உடலில் கொஞ்சம் கூச்சமாவது  நம்  உறுப்பினர்களுக்கு இருக்கவேண்டும் என்பதே ரோசமுள்ள மக்களின் அவாவாகும்..

தேர்தல் மேடைகளில் வாய்கிழிய கத்தும் அண்டங்காக்கைகளுக்கு மத்தியில் ஒரு குயிலாவது உள்ளதே என்று சந்தோசப்பட்டுக்கொள்வோம்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.
ரோஷம் இல்லாவிட்டால் பரவாயில்லை உடலில் கொஞ்சம் கூச்சமாவது நம் உறுப்பினர்களுக்கு இருக்கவேண்டும்.  ரோஷம் இல்லாவிட்டால்  பரவாயில்லை  உடலில் கொஞ்சம் கூச்சமாவது  நம்  உறுப்பினர்களுக்கு இருக்கவேண்டும். Reviewed by Madawala News on June 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.