ஞானசார தேரருக்காக நல்லாட்சி அரசாங்கம் முன்நிற்க வேண்டியது
கட்டாயம் என ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயாக்க குறிப்பிட்டார்.
ஞானசார தேரர் சிறைப்படுத்தப்பட்டுள்ளமை இன்று நாட்டில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.அதற்கு நாம் இடமளிக்க முடியாது. பிரச்சினையாக்கிகொள்ள வேண்டிய தேவையும் இல்லை.அதற்கான நேரமும் இதுவல்ல.
நாம் இந்த தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீடு செய்துள்ளாம். வெள்ளிக்கிழமை அவருக்கு பிணை பெற நடவடிக்கை எடுத்துள்ளோம் என குறிப்பிட்டார்.
தனக்கு ஞானசார தேரருடன் தனிப்பட்ட ரீதியில் நட்பு இருப்பதை நினைவு கூர்ந்த அவர் தேரர் சிறைச்சாலையில் தன்னோடு தனிப்பட்ட ரீதியில் உரையாடியாடியதாக அவர் குறிப்பிட்டார்.
ஞானசார தேரருக்காக நல்லாட்சி அரசாங்கம் கட்டாயம் முன்நிற்க வேண்டும்..
Reviewed by Madawala News
on
June 20, 2018
Rating: