கண்டி மாவில்மடை பள்ளிவாயலில் மர்ம நபர்கள் புகுந்த சம்பவ விபரம்..



கண்டி மாவில்மடை பள்ளிவாயலில்  சீ சி டி வி டீவியார் மற்றும்  கணனி ஆகியவற்றை
இனந்தெரியாத நபர்கள் கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள கண்டி மாவட்ட மஸ்ஜித் சம்மேளனத் தலைவர் அல் ஹாஜ் கே ஆர் சித்தீக் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது ..

நேற்று நள்ளிரவு வேளை  கண்டி மாவில்மடை பள்ளிவாயலுக்கு வந்துள்ள மர்ம நபர்கள் பள்ளிவாயலை உடைத்து உட்புகுந்து   சீ சி டி வி டீவியார் மற்றும்  கணனி ஆகியவற்றை  கொண்டு சென்றுள்ளதாகவும் அயலில் உள்ள சீ சீ டி வி களை பரிசோதனை செய்த போது மூன்று மோட்டார் பைக் மற்றும் ஒரு படி வேன் வண்டியில் வந்தவர்களே இதனை எடுத்து சென்றிருக்கலாம் என  அறியவந்துள்ளதாக அவர் மடவளை  நியுசுக்கு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளதாக கூறிய அவர் கட்டுகஸ்தோட்டை  பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.


கண்டி மாவில்மடை பள்ளிவாயலில் மர்ம நபர்கள் புகுந்த சம்பவ விபரம்..  கண்டி மாவில்மடை பள்ளிவாயலில் மர்ம நபர்கள் புகுந்த சம்பவ விபரம்.. Reviewed by Madawala News on June 21, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.