நோன்புப் பெருநாளையொட்டி ஆஸி. பிரதமர் விருந்துபசாரம். இலங்கைப் பிரதிநிதியாக மல்வானை இர்ஷாத் ஏ காதர்


நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கொம் 
டேர்ன்புல் பல்வேறு
சமயங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் தூதுவர்களுக்கு தேநீர் விருந்துபசாரமொன்றை கன்பராவிலுள்ள பாராளுமன்ற இல்லத்தில் வழங்கினார். 


இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீ லங்கா முஸ்லிம் மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான, சவூதி அரேபியாவில் பணிபுரியும் இர்சாத் ஏ.காதரும் கலந்துகொண்டார். 


அவுஸ்திரேலியாவில் இளைஞர்களுக்கிடையே தொடர்பாடல் மற்றும் கலந்துரையாடலை மேம்படுத்துவது தொடர்பாகவே கலந்துரையாடப் பட்டது...


இலங்கைப் பிரதிநிதி இர்சாத் ஏ.காதர் இதுதொடர்பாக முன்வைத்த பிரேரணை சகல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 


இந்நிகழ்வில் அவுஸ்திரேலிய தூதுவராக சவூதி அரேபியாவுக்கு நியமிப்பதற்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரித்வான் ஜத்வாதும் கலந்துகொண்டிருந்தார். 


இர்சாத் ஏ.காதர் மள்வானையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் காதரின் மகனாவார்.   

நோன்புப் பெருநாளையொட்டி ஆஸி. பிரதமர் விருந்துபசாரம். இலங்கைப் பிரதிநிதியாக மல்வானை இர்ஷாத் ஏ காதர் நோன்புப் பெருநாளையொட்டி ஆஸி. பிரதமர் விருந்துபசாரம். இலங்கைப் பிரதிநிதியாக மல்வானை இர்ஷாத் ஏ காதர் Reviewed by nafees on June 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.