தந்தையை விடுதலை செய்யுங்கள்... ஜனாதிபதியிடம் கெஞ்சும் ஆனந்த சுதாகரின் பிள்ளைகள். நிறைவேற்றுவாரா ஜனாதிபதி.
பத்து வருடங்களாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் எமது தந்தையை விடுதலை செய்யுமாறு
ஜனாதிபதியிடம் நாங்கள் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றோம். தாயை நிரந்தரமாக இழந்துள்ள நாம் தந்தையுடன் வாழ ஆசைப்படுகின்றோம். எமது ஆசையை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும் என அரசியல் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நவோதய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கொழும்பு பிறைட்டன் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனை தெரிவித்தனர்.
மேலும், இந் நிகழ்வின்போது ஆயுள் தண்டனை பெற்றுள்ள அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகளுக்கான கல்வி செலவுக்கு ஒரு தொகை நிதியும் பாடசாலை உபகரணங்களும் முன்னிணியின் தலைவர் எஸ்.கே. கிருஷ்ணாவினால் வழங்கப்பட்டது.
ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்த ஆனந்த சுதாகரின் மகள் ( சங்கீதா )
நான் ஜனாதிபதிக்கும் அவருடைய மகளுக்கும் எமது தந்தையை விடுவிக்க உதவுமாறுகோரி கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளேன். அதில் '' தாயும் இல்லாமல் தந்தையும் இல்லாமல் இந்த வீட்டில் எம்மால் தனிமையில் இருக்க முடியாது. ஜனாதிபதி உங்களை தான் நாங்கள் கடவுளாக நினைத்து எமது தந்தையை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம். எம்மால் இரு கடிதங்கள் அனுப்பப்பட்டும் அதற்கு இது வரையில் பதில் ஏதும் கிடைக்கவில்லை என்றார்.
மகன் (கனிரதன்) கருத்துத் தெரிவிக்கையில்,
எமது தாய் இறந்துவிட்டார். தந்தை 10 வருடங்களாக சிறையிலிருக்கின்றார். என்னுடைய நண்பர்கள் அனைவரும் தங்களுடைய தந்தையுடன் வெளியிடங்களுக்கு செல்வதையும், விளையாடுவதையும் பார்க்கும் சந்தர்ப்பங்களில் எமக்கு அது மிகுந்த மன வேதனையை அளிக்கின்றது. எனக்கும் தந்தையுடன் விளையாட அவருடன் வாழ ஆசையாக இருக்கிறது. எனவே ஜனாதிபதி மாமா எங்கள் தந்தையை விடுதலை செய்யுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
ஆனந்த சுதாகரனின் தாய் (சுமதி) கருத்துத் தெரிவிக்கையில்,
எனது மகன் எந்த குற்றங்களும் செய்யாமல் கட்டாயப்படுத்தப்பட்டு குற்றப்பத்திரிகையில் கைழுத்து பெற்றப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஷ்வரன் ஜனாதிபதியிடம் கூறியுள்ளதை அறிவோம்.
இது தவிர எந்த தமிழ் அரசியல் தலைவர்களும் எனது மகனின் விடுதலை பற்றி எந்த முயற்சியும் மேற்கொண்டதாகத் தெரியவில்iலை. எனக்கு பணமோ அல்லது பிள்ளைகளுக்கு புத்தகங்களோ தேவையில்லை. நாம் கேட்டுக் கொள்வது ஒன்று தான். எமது மகன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றார்.
தந்தையை விடுதலை செய்யுங்கள்... ஜனாதிபதியிடம் கெஞ்சும் ஆனந்த சுதாகரின் பிள்ளைகள். நிறைவேற்றுவாரா ஜனாதிபதி.
Reviewed by Madawala News
on
June 21, 2018
Rating: