குளத்திற்கு அருகே இருந்து தந்தை முஸ்தபா மற்றும் மகன் சயாஸ் ஜனாஸாவாக மீட்பு.

வவுனியா - பாவக்குளம், சுதுவென்தபிளவ் பிரதேசத்தில் உள்ள குளத்திற்கு அருகே இருந்து இரண்டு ஜனாசாக்கள்
 கண்டெடுக்கப்பட்டதாக வவுனியா, பெரியஉலுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய எஸ். முஸ்தபா என்பவரும் அவருடைய 15 வயது மகனான எம். சயாஸ் என்பவருமே ஜனாஸாவாக  கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை இரண்டு ஜனாசாக்களும்  கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குளத்தின் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலியில் மோதியதால் இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் வவுனியா, பெரியஉலுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குளத்திற்கு அருகே இருந்து தந்தை முஸ்தபா மற்றும் மகன் சயாஸ் ஜனாஸாவாக மீட்பு. குளத்திற்கு அருகே இருந்து தந்தை முஸ்தபா மற்றும் மகன் சயாஸ் ஜனாஸாவாக மீட்பு. Reviewed by Madawala News on May 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.