இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
அதன்படி ஒக்டைன் 92 ஒக்டைன் வகை பெற்றோல் ஒரு லீட்டர் 137 ரூபாவாகவும், 95 ஒக்டைன் வகை பெற்றோல் 148 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதாக அவர் கூறினார்.
அதேநேரம் ஒட்டோ டீசல் 109 ருபாவாகவும், சுப்பர் டீசல் 119 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுகிறது. அத்துடன் மண்ணெண்ணெய் ஒரு லீட்டர் 101 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுகிறது.
முன்னதாக ஐஓசி நிறுவனத்தினால் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபகத்தினால் விலை அதிகரிக்கப்படவில்லை.
இன்று நள்ளிரவு முதல் பெட்றோல், டீசல் விலை அதிகரிக்கிறது. இது தான் புதிய விலை.
Reviewed by Euro Fashions
on
May 10, 2018
Rating: