2005 முதல் 2015ம் ஆண்டு வரை நாட்டின் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. விஷேட நீதிமன்றம் அமைத்து அந்த பணத்தை மீளப் பெறுவோம்.
நாட்டில் கையிருப்பில் இருந்த பணமும் மற்றும் கடனாக பெற்றுக் கொண்ட பணமும் கடந்த 2005
முதல் 2015ம் ஆண்டு வரையான காலத்தில் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக நீதியமைச்சர் தலதா அத்துகோரல கூறியுள்ளார்.
மூன்று நீதிபதிகள் அடங்கிய விஷேட நீதிமன்றம் அமைக்கும் திட்டம் குறித்து கடந்த சில காலங்களாக பேசப்பட்டு வந்ததாக அவர் கூறியுள்ளார்.
இதனூடாக இடம்பெறுவது அரசியல் பழிவாங்கல் அல்ல என்றும் இந்த மோசடிகளுடன் தொடர்புடைய நபர்களிடமிருந்த பணத்தை மீளப் பெற்றுக் கொள்வதே என்றும் அவர் கூறினார்.
யார் விரும்பாவிட்டாலும் அரசாங்கம் என்ற ரீதியில் தாம் சரியான விடயங்களை நடைமுறைப்படுத்துவதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அசை்சர் தலதா அத்துகோரல கூறியுள்ளார்.
2005 முதல் 2015ம் ஆண்டு வரை நாட்டின் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. விஷேட நீதிமன்றம் அமைத்து அந்த பணத்தை மீளப் பெறுவோம்.
Reviewed by Madawala News
on
May 12, 2018
Rating: