ஹப்புத்தளை – கோனமுட்டா மேல்பிரிவு தோட்டத்தில் ஆசிரியை ஒருவரை, கூரிய ஆயுதத்தால் தாக்கி
காயப்படுத்திய 17 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியை பாடசாலையில் இருந்து வீடு செல்லும் வழியில், இடைநடுவில் வழி மறித்து குறித்த இளைஞரால் தாக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, பலத்த காயங்களுக்கு உள்ளான இள வயதுடைய ஆசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், சந்தேகத்திற்குரிய இளைஞரையும் அவரது குடும்பத்தினரையும் அந்த பகுதியில் இருந்து வெளியேறுமாறு தெரிவித்து, தோட்ட மக்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இளவயது ஆசிரியையை, வீடு செல்லும் வழியில் மறித்து கூரிய ஆயுதத்தால் தாக்கிய மாணவன். ஆசிரியை படுகாயம்.
Reviewed by Madawala News
on
May 17, 2018
Rating: