குடிவெறியில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று நண்பர்கள்... ஒருவர் பலி.


மெதகம, பிபில பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகியதுல் நேற்று (07) இரவு இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பலத்த காயங்களுக்குள்ளான மூவரையும் மெதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

18 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும் மது அருந்தி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குடிவெறியில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று நண்பர்கள்... ஒருவர் பலி. குடிவெறியில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று நண்பர்கள்... ஒருவர் பலி. Reviewed by Madawala News on May 08, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.