ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட டுவிட்
தொடர்பாக விசாரணை செய்ய குற்றவியல் புலனாய்வு திணைக்களம் பி.பி.சி செய்தியாளர் அஸ்ஸாம் அமீனுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதனை சற்றுமுன் அஸாம் அமீன் மடவளை நியுசுக்கு உறுதிப்படுத்தினார்.
ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த புதிய கொள்கை முறைகள் தொடர்பான பதிவிற்கு ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட “நீங்கள் சிறந்த பேச்சாளர் ஆனால் அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறீர்கள் என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்! செயலில் காட்டுங்கள்” என்ற பதிவை மீள் பதிவு செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ டுவிட்டர் ஹெக் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்தது.
தற்போது நிலைமை சுமுகமான முறையில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இருந்த போதிலும் சர்ச்சைக்குரிய டுவிட்டடை மீள் பதிவு செய்த செய்தியாளர் அஸ்ஸாம் அமீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பி.பி.சி செய்தியாளர் அஸ்ஸாம் அமீனுக்கு குற்றவியல் புலனாய்வு திணைக்களம் அழைப்பு!!!
Reviewed by Madawala News
on
May 09, 2018
Rating: