மாட்டிறைச்சி எதிர்ப்பு- சாவகச்சேரி


சாவகச்சேரியிலேயே மக்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்க இந்த மாட்டிறைச்சி எதிர்ப்பு தேவையா?
இது வெறும் மாட்டிறைச்சி எதிர்ப்பு அல்ல.மதவாத எதிர்ப்பு.இந்த மதவாத எதிர்ப்பில் பௌத்த சிங்கள மக்களை தூண்டிவிட்டு சைவ- இந்துக்கள் குளிர்காய முயல்கிறார்கள்.

இலங்கையில் வாழும் எந்தவொரு பொதுமக்களுக்கும் மாட்டிறைச்சி பிரச்சினையாக தோன்றவில்லை.நாட்டை குழப்ப நினைக்கும் மறவன்புலவு சச்சிதானந்தம்,ஞானசார தோரோ,மேர்வின் சில்வா போன்ற ஒரு சிலரே இதை வைத்து பிழைப்பு நடத்த முயல்கிறார்கள்.இந்தப் பிழைப்புவாதிகளால் ஏற்படப்போகும் ஆபத்தை தமிழ் தேசியம் அல்லது இலங்கைதேசியம் பேசுவோர் கவனத்தில் கொள்வதில்லை.

மாட்டிறைச்சி விற்பனையில் இஸ்லாமிய மக்கள் அதிகம் ஈடுபட்டாலும் சகல மதம் சார்ந்தவர்களும் மாட்டிறைச்சியை விரும்பி உண்ணுகிறார்கள்.எனது கிராமத்தில் மிக அதிகமானவர்கள் மாட்டிறைச்சி உண்பவர்கள்.பலர் தீபாவளி நாளில் மாடு வாங்கி பங்கு போட்டுக் கொள்வார்கள்.அயற் கிராமங்களிலும் நடக்கும்.குடாநாட்டில் இஸ்லாமியர்கள் அதிகம் இல்லை. சைவர்களே மாட்டுறைச்சி அதிகம் வாங்கி சாப்பிட்டார்கள்.

சாவகச்சேரியில் கச்சாய் கடற்கரை என்றபகுதி உள்ளது.இங்கே துப்பரவு செய்யும் தொழிலாளர்கள் வாழ்கிறார்கள்.சீரான குடிசை வீடுகள் கிடையாது.கல்வி அறிவு அறவே இல்லாத மக்கள்.இவர்களை யாரும் தீண்டுவதே இல்லை.ஆனால் தமது இச்சைகளை தீர்க்க இப் பகுதிகளில் வாழும் ஏழைப் பெண்களிடம் பல ஆண்கள் போய் வருவார்கள்.இந்த மக்கள் சைவர்கள் இந்துக்கள்.இவர்களின் வாழ்க்கை,பட்டினி இவை பற்றி இந்த மாட்டிறைச்சி எதிர்ப்பாளர்களுக்கு கவலை இல்லை.அக்கறை இல்லை.ஆனால் மாட்டைப் பற்றி கவலை.பசுவதை பற்றி கவலை.என்னமனிதாபிமானம்.

யுத்தத்தால் கை,கால் இழந்து அங்கவீனர்களாக வேலை இல்லை,ஒரு வேளை சோற்றுக்கே வழி இல்லை.உடுக்க நல்ல ஆடை இல்லை.இருக்கபடுக்க ஒழுங்கான குடிசைகள் இல்லாமல் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் பற்றிய கவலைகள் இல்லை.ஆனால் மாடுகளைப்பற்றி மட்டும் கவலை.என்ன வேசம்.என்ன நாடகம்.

மனிதர்களை மனிதர்களோடு மோதவிட்டு இரத்தம் சிந்துவதை வேடிக்கை பார்க்கநினைக்கும் அறவழி போராட்டகுழு,சிவசேனை ,நல்லை ஆதீனம் போன்றவற்றின் வேசங்கள் கலைக்கப்பட வேண்டும்.இந்த போலி ஆன்மீகவாதிகள் முகமூடிகளை கிழிக்க மக்கள் முன்வரவேண்டும்.இரத்தத்தில் குளிர்காய நினைக்கும் இவர்கள் இந்திய இந்து மதவெறி அமைப்புகளின் கைக்கூலிகள்.இவர்களால் மீண்டும் ஒரு யுத்தம்,சமூகமோதல்கள் உருவாகலாம்.அதை உருவாக்கவே இந்த மாட்டிறைச்சி எதிர்ப்பு.அதன் மறுவடிவம் இஸ்லாமிய விரோத செயற்பாடு.

உண்மையில் இந்த நாட்டு அரசியல்வாதிகள் அரசியற் கட்சிகளுக்கு குறிப்பாக தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் இன்றே இதைகண்டிக்க முன்வரவேண்டும்.அவர்களிடம் மக்கள் நலன்,சமூக ஒற்றுமை பற்றிய அக்கறை இருந்தால் நேர்மையோடு இன்றே கண்டிக்கவேண்டும்.இவர்களை எதிர்க்க வேண்டும்.

மாட்டிறைச்சி எதிர்ப்பு என்பது இஸ்லாமிய மக்களை ஒதுக்கும் சதி முயற்சி.அவர்கள் தமிழ் பேசும் மக்கள்.மதம் வேறானாலும் மொழிபண்பாடுகள் ஒன்று.

இன்று காலி மாநகர சபையில் தமிழ் ஒலிக்கிறது.அங்கே றிகானா என்ற பெண் தமிழால் முழங்குகிறார்.தமிழின் உரிமையை தனியாக நிறுத்தியுள்ளார்.அதுதான் தமிழ் பற்று

.மதம் வேறான போதும் தாய்மொழியை மறக்காமல் வாழும் இஸ்லாமிய சமூகம் நமது உறவுகள்.சகோதர்ர்கள்.

விலங்குகளிடம் காட்டும் அக்கறையை மனிதர்களிடம் காட்டுங்கள்.விலங்குகளை காரணமாக்கி மனித இரத்த ஆறு இந்த மண்ணில் ஓட வேண்டாம்.மதங்களை புறம் தள்ளி மனிதர்களாக அக்கியப்படுவோம்.

நான் பிறந்து வளர்ந்த தென்மராட்சி மண்ணில் இந்த மதவெறியர்கள் சமூகவிரோதிகள் களமாக்கியதை நினைத்து வெட்கப்படுகிறேன்.எந்த வன்முறைக்கும் இடம்கொடுக்காத சாவகச்சேரி மக்கள் இவர்களையும் புறம்தள்ளுவார்கள்.

எதற்காக போராடவேண்டுமோ அதற்காகவே போராடவேண்டும்.மனிதர்களை மோதவிட்டு இரத்தம் சிந்த வைத்து வேடிக்கை பார்க்கவேண்டாம்.1977 இல் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அறவழி போராட்டகுழுவே இலங்கையின் அழிவுக்கு வித்திட்ட அமைப்பாக சதியாக இருக்கும் என சந்தேகம் வருகிறது..அதன் தொடர்ச்சியாகவே சிவசேனை அமைப்பு.

முதலில் மக்களின் பசியை போக்குங்கள்.நல்ல கல்வி வாழ்வாதாரம் கொடுக்க போராடுங்கள்.வீண் சண்டைகளை உருவாக்கி இருக்கும் அமைதியையும் கெடுக்க வேண்டாம்.நாட்டைக் கெடுக்க வேண்டாம்.

நன்றி,
Vijaya Baskaran
மாட்டிறைச்சி எதிர்ப்பு- சாவகச்சேரி  மாட்டிறைச்சி எதிர்ப்பு- சாவகச்சேரி Reviewed by Madawala News on May 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.