மட்டக்களப்பு – வாகரை – பணிச்சங்கேணி பகுதியில் இராணுவ வீரர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால்
சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
24 வயதுடைய கந்தானை பகுதியை சேர்ந்த சஞ்சீவ என்ற இராணுவ வீரரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இராணுவ வீரரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த இளம் இராணுவ வீரர். #மட்டக்களப்பு.
Reviewed by Madawala News
on
May 09, 2018
Rating: