-ஜே.எம்.ஹபீஸ்-
வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பாடசாலை
மாணவர்களுக்கிடையே தேசிய ஒற்றுமை, சகவாழ்வு, சமுக நல்லிணக்கம் என்பவற்றை விரிவு படுத்தும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட ஐந்து நாள் செயலமர்வு ஒன்று கண்டி குருதெனியாவில் உள்ள கல்வி வள மேம்பாட்டு நிலையத்தில் நடை பெற்றது. ஒருமாகாணத்திலிருந்து 60 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
அதன் இறுதிநாள் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் எக்கநாயக்கா கலந்துகொண்டு மாணவர்களது ஆக்கங்களைப் பார்வையிடுவதையும், பங்கு கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதையும் காணலாம்.
(படங்கள்) கண்டியில் மாணவர்களுக்கிடையே தேசிய ஒற்றுமை, சமுக நல்லிணக்க நிகழ்ச்சி.
Reviewed by Madawala News
on
May 13, 2018
Rating: