கண்டி, திகன பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான
சந்தேக நபரான அமித் ஜீவன் வீரசிங்க மற்றும் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 35 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்று (14) தெல்தெனிய நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அவர்களை மே 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதான சந்தேகநபரான அமித் வீரசிங்கவை அநுராதபுரம் சிறைச்சாலைக்கும் ஏனைய சந்தேகநபர்களை அவர்கள் இருந்த சிறைச்சாலையிலும் வைக்க நீதவான் எம்.எம் பரீக்டீன் உத்தரவிட்டுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரான அமித் வீரசிங்க மார்ச் 08 ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமித் உட்பட 35 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
Reviewed by Madawala News
on
May 14, 2018
Rating: