வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு



2017 டிசெம்பர் 31ஆம் திகதிவரை 5 வருடங்களாக வாகன வரி அனுமதிப்பத்திரம் பெறப்படாத
வாகனங்கள் தொடர்பில் வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இவ்வாறான வாகனங்கள் பயன்பாட்டில் இல்லாத வாகனங்கள் எனக் கருதி அவை அனைத்தினதும் பதிவுகள் நீக்கப்படும் என;று வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் அறிவித்துள்ளார்.
வாகனத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக வரி அனுமதிப்பத்திரம் பெறவில்லையாயின் உடனடியாக அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் நிலுவையைச் செலுத்தி வரிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.  வாகனம் பழுமடைந்த நிலையில் இருக்குமாயின் பிரதேச செயலகத்தில் நிலுவைக் கொடுப்பனைவைச் செலுத்தி பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும். என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை வாகன உரிமையாளர்கள் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாதிருப்பின்இ அந்த வகை வாகனங்களின் பதிவுகள் எதுவித முன்னறிவித்தலுமின்றி மோட்டார் வாகனப் பதிவாளரால் நீக்கப்படும் எனவும் வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர்  கூறியுள்ளார்.
வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு  வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளரின் முக்கிய  அறிவிப்பு Reviewed by Madawala News on May 15, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.