நேற்று 25/05/2018 மூன்றாவது நாளாகவும் இடம் பெற்ற நபவிய்யா இஸ்லாமிய இளைஞர் அமைப்பினரின்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சஹர் உணவு ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றன.
இதில் காலி,பேருவளை மற்றும் மல்வானையைச்சேர்ந்தவர்கள் கலந்துகொண்டிருந்னர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக (சுமார் 2000 பேருக்கான) சகர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு இவை மல்வானையின் ரக்ஸபான, விதானகொட, காந்தியவலவ்வ, ஆட்டாமாவத்த போன்ற பகுதிகளில் விநியோகிக்கப்பட்டன .
இதில் சுமார் 100 இளைஞர்கள் வரை பங்கேற்றுருந்தனர்.
மக்களுக்கான தேவை இருக்கும் வரை தாம் உணவு ஏற்பாடு செய்யத்தயாராக இருப்பதாக நபவிய்யா அமைப்பின் தலைவர் குறிப்பிட்டார் .
இதேவளை காதிரியதுன் நபவிய்யா தரீக்காவின் ஆன்மீகத் தலைவர் சங்கைக்குரிய சேகுநாயகம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் கடந்த 2016 ,2017 ஆம் ஆண்டும் வெள்ளப் பெறுக்கின் போது பல்வேறு சமூகப்பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
-Abdull Hameed Mohamed Fawzan -
வெள்ளத்தால் பாதிக்கபட்ட சுமார் 2000 பேருக்கு சஹர் உணவு ஏற்பாடுகள். #மல்வானை
Reviewed by Madawala News
on
May 25, 2018
Rating: