ஸம் ஸம் பவுன்டேஷன் - கடார் அமைப்பு “சிறந்ததோர் எதிர்காலத்திற்கான எமது சமூகக் கடமைகள்” எனும்
தலைப்பில் பொது பயான் நிகழ்ச்சி ஏப்ரல் 26ம் திகதி வியாழக்கிழமை பனார் மஸ்ஜிதில் இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை (பெண்களுக்கான ஏற்பாடுகளுடன்)
ஸைனயாவில் அமைந்துள்ள அல் அதிய்யா மஸ்ஜிதில் ஏப்ரல் 27ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் வளவாளராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதித் தலைவர்களின் ஒருவரும் ஸம் ஸம் நிறுவனத்தின் தலைவருமான நாடறிந்த பேச்சாளர் அஷ்ஷெய்க் முப்தி யூசுப் ஹனீபா அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் மொழி பேசும் அனைத்து சகோதரர்களும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கிறார்கள்.
ஏற்பாட்டுக் குழு
ஸம் ஸம் பவுன்டேஷன் - கடார்
கடார் நாட்டில் அஷ்ஷெய்க் யூசுப் முப்தி அவர்கள்.
Reviewed by Madawala News
on
April 25, 2018
Rating: