பாறுக் ஷிஹான்
நான் வயது முதிர்ந்தவன். கவிஞர் கண்ணதாசன் கூறியதைப் போன்று “வீடுவரை உறவு
வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ” என்றதைபோன்று கடைசியில் வடமாகாண தமிழ்மக்களுக்காக என் உயிரையும் கொடுத்துச் சேவையாற்ற இங்கு வந்துள்ளேன் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ” என்றதைபோன்று கடைசியில் வடமாகாண தமிழ்மக்களுக்காக என் உயிரையும் கொடுத்துச் சேவையாற்ற இங்கு வந்துள்ளேன் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
யாழ்.புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கத்தின் முதலாமாண்டு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(22) இடம்பெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பதாக மத்திய மாகாண ஆளுநராக நான் நிமிக்கப்பட்டபோதும் ஒரு நாளேனும் அக்கடமையினை செய்யாது மீண்டும் வட மாகாணத்திற்கு சேவையாற்ற வந்திருக்கின்றேன். அந்த தருணத்தில் தமிழ்மக்களின் மனிதநேயப் பண்பினை நான் நன்கு அறிந்து கொண்டேன்.
வடமாகாணத்திற்கு நான் ஆளுநராக கடமைக்கு வரும்போது என்னுடய மனைவி அங்கே போகவேண்டாம் என்று சொல்லி அழுதார். நான் இறக்க நேரிடும் என்று கூறினார். இன்று அவரும் இங்கே வடக்கு மாகாணத்திற்கு வந்திருக்கின்றார். அவருக்கும் வடக்கு தமிழ்மக்களின் மனிதநேயம் நன்றாகப் புரிந்துவிட்டது.
கடந்த வருடங்களை விட மேலும் மேலும் வடமாகாண மக்களுக்குச் சேவையாற்ற முடிவு செய்துள்ளேன்
அம்பலவாணர் கலையரங்கினை கட்டுவதற்காக கனடா, பிரித்தானியா, ஆஸ்ரேலியா, ஜேர்மனி போன்ற பல நாடுகளிலிருந்தும் கோடிக்கணக்கான பணத்தினை பலர் நன்கொடையாக வழங்கியிருக்கின்றார்கள்.
இதனைப் பார்க்கும்போது புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மாதம் ஒன்றிற்கு ஒரு டொலர் பணத்தினை அனுப்பினால் இங்கு அபிவிருத்தி செய்வதற்கு அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியே தேவையில்லை எனத் தோன்றுகின்றது எனவும் தெரிவித்தார்.
தமிழர்களுக்காக உயிரையும் கொடுத்துச் சேவையாற்றுவேன்- வடக்கு ஆளுநர்
Reviewed by Madawala News
on
April 22, 2018
Rating: